Home

Monday, 5 August 2013

நம்பிக்கை

அவள் கண்கள் என்னை சுண்டி இழுத்த பொழுது தெரியவில்லை....
அவள் அண்ணன் கை என் கண்ணத்தை பதம் பார்க்குமென்று!

அவள் அழகு என்னை வசீகரித்த பொழுது தெரியவில்லை....
அவள் அப்பன் ஆட்களை ஏவி என் முதுகில் டின் கட்டுவானென்று!

அவளிடம் காதலை சொன்ன அந்த நிமிடம் எனக்கு தெரியவில்லை....
அவள் என்னுடன் ஓடி வந்துவிடுவாள் என்று.....

அவள் அப்பனும் அண்ணனும் அவள் மீது வைத்த நம்பிக்கைக்கு தெரியவில்லை....
காதலின் முன் அது செத்து சுடுகாடு போய்விடும் என்று......

-ஜெயா

No comments:

Post a Comment